search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிடம் ஜேப்படி"

    கள்ளக்குறிச்சியில் பஸ்சில் பயணம் செய்த விவசாயிடம் ஜேப்படி செய்த வாலிபரை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48), விவசாயி. நேற்று இவர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து நீலமங்கலம் செல்லும் பஸ்சில் ஏற முயன்றார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முருகேசனின் சட்டை பையில் இருந்த 300 ரூபாயை ஜேப்படி செய்து விட்டு தப்பி ஓட முயன்றார்.

    இதில் சுதாரித்துக் கொண்ட முருகேசன் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த வாழவந்தான் மகன் ராமமூர்த்தி (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்தனர். 

    ×